ஓரிரவு கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு

ஓரிரவு கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 26-05-2026 | 3:19 PM

Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கி தனது நாணயக் கொள்கை நிலைப்பாட்டை 100 அடிப்படை புள்ளிகளால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, ஓரிரவு கொள்கை வட்டி 8.75 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நாணயக் கொள்கை சபை நேற்று(25) கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மாற்றமடையும் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.