.webp)

Colombo (News 1st) ஓய்வூதிய சம்பள மறுசீரமைப்பின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓய்வூதிய சம்பள மறுசீரமைப்பின் முதற்கட்டத்தின் கீழ் 98 சதவீதமானோருக்கு கொடுப்பனவுகள் வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர், பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
ஓய்வூதியத் திணைக்களத்தின் கட்டமைப்பில் 4,63,000 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது வரை 4,29,000 ஓய்வூதியதாரர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த கட்டமைப்பில் மாதத்திற்கு புதிதாக சுமார் 2,500 ஓய்வூதியதாரர்கள் இணைவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஓய்வூதியம் வழங்கும் செயன்முறையை விரைவுபடுத்துவதற்காக தற்போது பிரதேச செயலகங்கள் மூலம் Online கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டமைப்பின் ஊடாக ஏற்கனவே சுமார் 3,97,154 ஓய்வூதியதாரர்களின் தரவுகள் தானியங்கி முறையில் கணக்கிடப்பட்டு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
