.webp)

Colombo (News 1st) உலக தடுப்பூசி வாரம் இன்று(24) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகின்றது.
அனைத்து வயதுடையவர்களையும் நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக தடுப்பூசிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் அதற்கு தேவையான கூட்டு நடவடிக்கைகளை வலியுறுத்துவதும் உலக தடுப்பூசி வாரத்தின் நோக்கமாகும்.
வருடாந்தம் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் உலக தடுப்பூசி வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்பு முறைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுடன் இணைந்து செயற்படுகின்றது.
அத்துடன், உயர்தர நோய்த்தடுப்பு திட்டங்களை செயற்படுத்த தேவையான வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அரசாங்கங்களுக்கு வழங்குவதும் ஸ்தாபனத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும்.
தடுப்பூசிகள் மூலம் தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து அதிகளவான மக்களை பாதுகாப்பதும் அவர்களின் சமூகங்களை பாதுகாப்பதும் உலக தடுப்பூசி வாரத்தின் முக்கிய இலக்காகும்.
