ஒன்றோடொன்று மோதிய படகுகள் : மீனவர் பலி

மன்னார் கடலில் ஒன்றோடொன்று மோதிய படகுகள் : மீனவர் பலி

by Staff Writer 15-04-2026 | 7:12 PM

Colombo (News 1st) மன்னார் - வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று(15) அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இரு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடனொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னார் கடல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 02 மீன்பிடிப் படகுகள் ஒன்றோடொன்று மோதியுள்ளன.

விபத்தில் இரு படகுகளும் பலத்த சேதமடைந்த நிலையில் படகிலிருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டதோடு, மற்றையவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.