.webp)

Colombo (News 1st) இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மொலுகா கடலின் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நில அதிர்வு மையத்தில் இருந்து 1,000 கிலோமீட்டர் எல்லைக்கு உட்பட்ட இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் கரையோர பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என ஹவாய் தீவுகளை மையமாகக் கொண்ட சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இதன் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
