வாராந்தம் புதன்கிழமை அரச விடுமுறையாக பிரகடனம்

by Staff Writer 16-03-2026 | 7:36 PM

Colombo (News 1st) மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு வாராந்தம் புதன்கிழமை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(16) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இது தொடர்பில் தெளிவுபடுத்தினார்.