.webp)
-610749-554112.jpg)
Colombo (News 1st) 130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு 06 பகுதியை சேர்ந்த 59 வயதான சட்டத்தரணியொருவரே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திடீர் சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
