Colombo (News 1st) சிறுபோக நெல் கொள்வனவிற்காக சலுகை வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படவுள்ளது
2024 சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவிற்காக சலுகை வட்டி வீதத்தில் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 6000 மில்லியன் ரூபா வங்கிகள் மூலம் கடனாக வழங்கப்படவுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் களஞ்சிய உரிமையாளர்கள், மொத்த நெல் கொள்வனவாளர்களுக்கு இந்த கடன் வழங்கப்படவுள்ளது.