இடைக்கால கொடுப்பனவிற்கு காப்புறுதியாளர்கள் அனுமதி

X-Press Pearl விபத்து: இடைக்கால கொடுப்பனவிற்கு காப்புறுதியாளர்கள் அனுமதி

by Bella Dalima 10-05-2024 | 3:35 PM

Colombo (News 1st) X-Press Pearl விபத்து தொடர்பில் இடைக்கால கொடுப்பனவிற்கு காப்புறுதியாளர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். 

1.3 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கொடுப்பனவை மேற்கொள்ள அவர்கள் இணங்கியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இலங்கை கடற்பரப்பில் 2021 ஆம் ஆண்டு ​மே மாதம் 20 ஆம் திகதி X-Press Pearl கப்பலால் பாரியதொரு அழிவு ஏற்பட்டது. 

எக்ஸ்பிரஸ் பேர்ள் (X-Press Pearl) கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கோரி இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர் சர்வதேச வணிக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.