Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், அவர் இன்று (10) முற்பகல் சத்தியப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்காக முஜிபுர் ரஹ்மானின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது.
இதற்கமைய, முஜிபுர் ரஹ்மானை பாராளுமன்ற உறுப்பினராக பெயரிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டிருந்தது.
டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியியை இரத்து செய்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு அமைய இவ்வாறு வெற்றிடம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.