5கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் ​கைது

ஐந்து கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

by Staff Writer 09-05-2024 | 10:52 AM

Colombo (News 1st) ஐந்து கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளை தாய்லாந்திலிருந்து நாட்டிற்கு கொண்டுவந்த ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து  5 கிலோ 278 கிராம் எடையுடைய 'குஷ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 32 வயதான சந்தேகநபர், தமது பயணப்பொதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த நிலையில் போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒருதொகை சிகரெட்களுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு - நாகலகம வீதி பகுதியைச் சேர்ந்த 29 வயதான சந்தேகநபரிடமிருந்து, 6 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை துபாயிலிருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.