நாளை(08) முதல் பலத்த மழை

நாளை(08) முதல் பலத்த மழை

by Staff Writer 07-05-2024 | 9:12 AM

Colombo (News 1st) நாட்டின் பல மாகாணங்களில் நாளை(08) முதல் அதிகளவு மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மழை காரணமாக நிலவும் வெப்பமான வானிலை குறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாக திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

மேல், சப்ரகமுவ, மத்திய, மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2  மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றும் நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை அதிகரித்து காணப்படுமென திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியளவுக்கு வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோன்று மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று(07) வெப்பம் அதிகரித்துக் காணப்படுமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.