மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு

நாட்டில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு

by Bella Dalima 04-05-2024 | 3:37 PM

Colombo (News 1st) நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட  பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள  வேண்டியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் G. விஜேசூரியவிடம்  வினவிய போது, வைத்தியசாலைகளில் இதுவரையில் 20 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அதற்கு மாற்று மருத்துகள் நாட்டில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், வைத்தியசாலைகளில் அரிதாக தேவைப்படும் 115 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடுகள் நிலவுவதாகவும்
அவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி மற்றும் அனுமதிகளை வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் வைத்தியர் G.விஜேசூரிய கூறினார்.