Colombo (News 1st) தலைமன்னாரில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடையவரின் 9 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் பறிமுதல்
தலைமன்னாரில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரின் 9 கோடிக்கும் அதிகமான சொத்துகள் தற்காலிகமாக பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
யுக்திய சுற்றிவளைப்பின் கீழ், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படை இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துகள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, தலைமன்னாரை சேர்ந்த 43 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளை அடுத்து, அவருக்கு சொந்தமான இரண்டு வீடுகள், சொகுசு வாகனம் உள்ளிட்ட 9 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் நீதிமன்ற அனுமதியுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.