Colombo (News 1st) அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று(11) காலை நாடு திரும்பினர்.
ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் மூலம் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.