வர்த்தகர் கொலை: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

பெலவத்தையில் வர்த்தகர் கொலை: சந்தேகநபர்களுக்கு பெப்ரவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 07-02-2023 | 5:47 PM

Colombo (News 1st) பத்தரமுல்லை - பெலவத்தையில் வர்த்தகர் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடுவலை நீதவான் நீதிமன்றத்தில்  சந்தேகநபர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் 24 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவை பெற்றிருந்தனர். 

வன்னிநாயக்ககே ரொஷான் எனும் வர்த்தகர் கடந்த 2 ஆம் திகதி தலங்கம - பெலவத்தையிலுள்ள மூன்று மாடிக் கட்டடத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார். 

சம்பவம் தொடர்பில் 27 வயது இளைஞர் ஒருவரும் 23 வயதான யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.